search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
    X

    அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

    • அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
    • மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

    புதுக்கோட்டை

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை கடந்த 28-ந்தேதி திருச்சியை அடுத்த காட்டூர் பாக்காக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளுர் நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொடங்கப்பட்டது.

    விழாவிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு வானவில் மன்றத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள், அறிவியல் சோதனை முறைகளைப் பற்றி அறிவியல் ஆசிரியை ஜெயஜோதி மணி விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

    எட்டாம் வகுப்பு மாணவன் கலைவாணன் மினி மிக்ஸி செயல்படும் விதம் பற்றியும், ஆறாம் வகுப்பு மாணவி பிருந்தா முட்டையிலிருந்து அழுத்தத்திற்கான நோக்கத்தையும் தெளிவாக செய்து காட்டினார். விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன், மனோஜ் குமார், நிலோபர் நிஷா, சங்கீதா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×