search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்  சதய விழாவை முன்னிட்டு அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம்
    X

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம்

    • அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தாலுகா அழியாநிலை கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 27ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை வீரமுத்திரையர் சங்க இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×