என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது
- அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதியிலிருந்து சரக்கு லாரியில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து வாகன ஓட்டுனரான நெய்வேலி வடபாதி கள்ளன் தெருவை சேர்ந்த பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






