என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி
    X

    பொன்னமராவதியில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி

    • பொன்னமராவதியில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது
    • இதற்கான படிவம் தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் வழங்கினர்

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு ஊராட்சி ஒன்றிய அளவிலான பயிற்சி நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமை வகித்தார். ஒன்றிய துணைஆணையர் வளர்ச்சி குமார், கணினி உதவியாளர் பாண்டி ஆகியோர் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பற்றிய விளக்கம், கணக்கெடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்

    . மேலும் இதற்கான படிவம் தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் வழங்கினர். இதில் ஊராட்சித்தலைவர்கள் காமராஜ், செல்வமணி, கிரிகீதா, சுமதி, ராமாயி, ராமசாமி, சௌந்தர்ராஜன், ராமையா, கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகம், ரெங்கராஜ், ஒன்றிய அலுவலர்க்ள், ஊராட்சித்தலைவர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மகளிர்குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×