search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா
    X

    ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா

    • ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
    • குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார். ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு அடுத்த ராசிக்கு பெயர்ந்து செல்வது குரு பெயர்ச்சி என்று வணங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் பலவிதமான பயன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு நேற்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்து சென்றார். இதனைத் தொடர்ந்து நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவினையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×