search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
    X

    மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

    • மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
    • 23 கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வன்னியப்பிள்ளைவயல் கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நீதிராஜ் முன்னிலையில் நடைபெற்றக் கூட்டத்தில், கிராமபொதுமக்கள், அரசு அலுவலர்கள், காவல்த்துறையினர் கலந்து கொண்டனர். அப்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தல், தூய்மையான குடிநீர் வழங்குதல், இலக்கு மக்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட 23 கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று பின்பு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)தேவிகாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இறையருள், கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள்,வார்டு உறுப்பினர்கள்,கிராம உதவியாளர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×