என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி
- இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
- வரும் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை" என்ற தலைப்பில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை" என்ற தலைப்பில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது
வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்துதல் மட்டுமல்லாமல், அதனை சீரான நிலையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாக உள்ளது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் அங்ககவேளாண்மை குறித்து 20 நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயது உள்ள நபர்கள் பங்கேற்கலாம். பெண்கள், ஆதரவற்ற விதவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி புத்தக நகல், குறைந்தபட்ச கல்வி தகுதிக்கான 10ம் வகுப்பு கல்விச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வரும் 20-ந் தேதிக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலோ அல்லது புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்று தொழில் முனைவோராக தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்