search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதி கருப்புகுடிபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா
    X

    பொன்னமராவதி கருப்புகுடிபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா

    • பொன்னமராவதி கருப்புகுடிபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில மீன் பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் விவசாய பாசன கண்மாயில் நீர் வற்றும் கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி கலந்து கொள்ளக்கூடியதே மீன்பிடித் திருவிழாவாகும்.கடந்த ஆண்டு பெய்த மழையும் விவசாயம் போன்றே வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு எடுத்து சென்றனர்.

    Next Story
    ×