என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
    X

    விலை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

    • விலை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வெள்ளாள விடுதி அருகே உள்ள துணை மின் நிலையத்திற்கு தூத்துக்குடியில் இருந்து உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் மின் கோபுர பணிகள் நடைபெற்று வருகிறது.

    விளை நிலங்களில் அமைக்கப்படும் மின் கோபுரங்களுக்கான இழப்பீடுகளை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்காமலும், மேலும் கடந்த ஆறு மாத காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படாத இழப்பீடு தொகையை உடனே வழங்க கோரியும் விவசாயிகள் புதிய மின் கோபுரம் அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் கந்தர்வகோட்டை தாலுக்கா அலுவலகம் அருகே புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து கந்தர்வகோட்டை தி.மு.க. நகர செயலாளர் ராஜா, மின்சாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விளை நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் மின்சார துறை உயர் அதிகாரிகள் வழங்கினார்கள். இதனால் விவசாயிகள் மின் கோபுரம்அமைப்பதற்கான எதிர்ப்பை கைவிட்டனர்.

    Next Story
    ×