என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள அழைப்பு
- வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- திருச்சியில் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின்கௌ ரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம்ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர்,ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில்விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்குதங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து டிபிடி மோடுக்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம்ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம்2023 - வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் இலவசஅனுமதியில் கலந்துகொள்ளலாம். இங்கு வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சா ன்றளிப்புத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, வேளாண்அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனைநிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள்ஆகியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனிமாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்டவன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மைஇயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்