search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும்-வேளாண் இணை இயக்குனர் தகவல்
    X

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும்-வேளாண் இணை இயக்குனர் தகவல்

    • புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்.

    புதுக்கோட்டை,

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவற்றை பெற்று பயன்பெறுவதற்கு உழவன் செயலியில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக உழவன் செயலி என்ற உன்னதமான செயலி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×