என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பேருந்து மோதி விவசாயி பலி
- புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியானார்
- மலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மலையூர் அருகே உள்ள கருப்பட்டி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 80). விவசாயி. இவர் மலையூருக்கு சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






