என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய்  நீரில் மூழ்கி விவசாயி பலி
    X

    கண்மாய் நீரில் மூழ்கி விவசாயி பலி

    • கண்மாய் நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்
    • மகனுடன் குளிக்க சென்ற போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், தனது தாயார் மற்றும் 5 வயது மகனுடன் நேற்று மாலை செம்பூதி கிராமத்தில் உள்ள செங்கண்மாய் கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.

    சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பி இருந்த நிலையில் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென இருவரும் நீரில் தத்தளித்த நிலையில், தாயார் ஐந்து வயது மகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

    மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் ராஜாவை காப்பாற்ற முயன்றார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான குழுவினர் நீரில் மூழ்கிய ராஜாவை நேற்று இரவில் இருந்தே தீவிரமாக தேடி அவரது உடலை இன்று காலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ராஜாவின் உடன் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×