என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா
- ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
- புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி விஜய பாரதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கினர். அரசு வழக்குறைஞர் கண்ணதாசன் மற்றும் வழக்குறைஞர் சங்க தலைவர் எஸ்.பி.ராஜா, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நாகராஜ், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
Next Story






