என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி விழிப்புணர்வு பேரணி
    X

    தீபாவளி விழிப்புணர்வு பேரணி

    • தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி தீயணைப்பு துறை காவல் துறை பேரூராட்சி, லயன்ஸ் சங்கம் இணைந்து விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ேபரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணகுமார் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் விஜயபாரத ஆலங்குடி முன்னாள் தாசில்தார் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பட்டாசு வெளிப்புறத்தில் வைத்து வெடிக்கவும், ராக்கெட் வெடிகளை தவிர்க்கவும், ஒருமுறை ெவடித்த பட்டாசுகளை அப்படியே விட்டு விடுங்கள். வீடு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என பதகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீய ணைப்பு மீட்பு குழுவினர்கள் காவல்துறையினர், லயன்ஸ் சங்க நிர் வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொ ண்டனர்.

    Next Story
    ×