என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

    • நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் ரிச்சா குப்தா, அறிவியல் ஆேலாசகர் (நீர்வள ஆதாரம்) சுமன் சின்கா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், நீர் வளத்தை பெருக்கிடபும், குடிநீர் ஆதாரங்களை மேம்பாடுசெய்திடவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையங்குடி ஹோல்ஸ் வொர்த் அணைக்கட்டு, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவுடையார்பட்டி தடுப்பணை, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பண்ணைக்குட்டை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி பிலியம்பட்டியில் மேம்படுத்தப்பட்டுள்ள குடிநீர் ஊரணி ஆகியவற்றையும் இக்குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    Next Story
    ×