search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி-கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    புதுக்கோட்டையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் மற்றும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை நடத்தின. மன்னர் கல்லுாரியில் நடைபெற்ற இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்த ரங்கத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்து பார்வையிட்டார், அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, தகவல் கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், பெ.வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம், முன்னாள் படைவீரர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×