search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காயை உருட்டி மோதி உடைக்கும் விநோத போட்டி
    X

    தேங்காயை உருட்டி மோதி உடைக்கும் விநோத போட்டி

    • பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
    • இளைஞர்களுக்குள் கடும் போட்டி நிலவியது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட ங்களின் எல்லை கிராமங்களான மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி, பைங்கால், ஆவணம், குருவிக்கரம்பை, சனாகரை, குலமங்கலம், நெயாவத்தெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போர் தேங்காய் எனப்படும் தேங்காய் உடைக்கும் போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் போட்டிகள் நட ந்து வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும், இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயயை ெ காண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உண்டு. இதற்கென்றே தனித்துவம் வாய்ந்த தேங்காய்களை பொங்கலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வா ங்கி தயார் செய்துவிடுவார்கள்.

    இந்த போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×