search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் மழைநீர் வரத்து வாய்காலை தூர் வார வேண்டும் - விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
    X

    கந்தர்வகோட்டையில் மழைநீர் வரத்து வாய்காலை தூர் வார வேண்டும் - விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

    • நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது.
    • தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக செல்கிறது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.நாவல் ஏரியின் பாசன பரப்பளவு சுமார் 300 ஏக்கர் ஆகும்.

    இந்த நிலையில் நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக தாழைவாரியில் செல்கிறது.இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே உடனடியாக கோவிலூர் நாவல் ஏரியின் வரத்து வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×