என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி எல்கை பந்தயம்
    X

    மாட்டுவண்டி எல்கை பந்தயம்

    • அறந்தாங்கி அருகே ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
    • 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் தாலுகா வேள்வரை ஸ்ரீ ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×