என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்
- அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. 29-வது ஆண்டாக நடைபெறும் இப்பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 21 ஜோடி மாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 9 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வீதி பொதுமக்கள், இளைஞர்கள்செய்திருந்தனர்.






