என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி எல்கை பந்தையம்
- புதுக்கோட்டை அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- 41 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 41 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






