search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    கந்தர்வகோட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமினை கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தொடங்கி வைத்தார்.முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் 847 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.20 நபர்களுக்குகண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.டிஜிட்டல் எக்ஸ் ரே 46 பேருக்கு எடுக்கப்பட்டது.மருத்துவ பெட்டி 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.முன்னதாக அனைவரையும் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா அய்யாத்துரை, ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமிஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×