என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா
    X

    அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா

    • அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது
    • பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் ஏன காட்டு அய்யனார் கோயில் ஆடி மாதத்தில் குதிரை எடுப்பு திருவிழாவும் அதனைத்தொடர்ந்து ஏனமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவும் நடைபெறும் கடந்த இரண்டு ஆண்டுகலாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

    நடப்பாண்டு குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஏன மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா கலை கட்டியது. இதில் காட்டுப்பட்டி,வெள்ளையாண்டிபட்டி, சிவப்பிரகாசம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து கும்மியடித்து குழவை இட்டனர்.

    பின்னர் ஏனகாட்டு அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் அங்கிருந்து ஏனமாரியம்மன் கோயிலின் முன்பாக கூடையை இறக்கி பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனை 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழிபடுவர் .

    இதில் அனைத்து சமுதாயத்தினரும் ஜாதி மதம் பாராமல் ஒன்றுகூடி ஆண்டுதோறும் பாரம்பரியமாக இத்தகைய வழிபாடு செய்வதன் மூலமாக விவசாயம் செழிக்கும், நல்ல மழை பெய்யும், திருமண தோஷம் நீங்கும் , குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் இதனாலேயே இது போன்ற வழிபாடுகளை செய்து வருவதாக காட்டுபட்டி கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    Next Story
    ×