என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை திருடியவர் கைது
- வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்
- தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
விராலிமலை:
இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் நேற்று தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரது மனைவி சிவகாமி வீட்டை பூட்டி விட்டு கோகுல கிருஷ்ணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்த 1½ பவுன் செயின் திருடப் பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கோகு–லகிருஷ்ணன் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசா–ரணை நடத்தியதில், செயினை திருடியது இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் ராஜாபாண்டி (21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜபாண்டியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.






