என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஏரோமாடலின் பயிற்சி பட்டறை
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏரோமாடலின் பயிற்சி பட்டறை நடைபெற்றது
- நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் மாதிரி விமானங்கள் பறப்பதை பார்வையிட்டார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் திருச்சி பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஏரோமாடலின் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை நிறைவு மற்றும் மாதிரி விமானம் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று மாதிரி விமானங்களை பறக்கவிட்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணை தலைவர் ராஜேஸ்வரி, திமுக நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், கிருஷ்ணமூர்த்தி, சையது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






