search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
    X

    விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

    • வேளாண் துறை சார்பில் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராமத்தில் நெல் பயிரில் பச்சை வண்ண இலை அட்டை குறித்த செயல் விளக்கத்தை, வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை பூச்சி குறித்த பயன்பாடு செயல் விளக்கம் அளித்தனர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர் நக்கீரன் வழிகாட்டுதல் படியும், கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குனர் அன்பரசன், மற்றும் வேளாண் உதவி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையிலும், விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை உபயோகிக்கும் முறையை பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடியின் முக்கியத்தை பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


    Next Story
    ×