என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலி
    X

    கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலி

    • கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலியானார்
    • இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நரங்கிய பட்டு யாதவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 27). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி விவசாய பணியை செய்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் கறம்பக்குடியில் இருந்து புதுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெரிய காட்டாற்று பாலம் அருகே சென்றபோது நிலை தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனை, பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×