என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே சர்க்கரை ஆலை காவலாளி விபத்தில் பலி
- கந்தர்வகோட்டை அருகே சர்க்கரை ஆலை காவலாளி விபத்தில் பலியானார்
- திருமணம் நடந்து 2 வருடங்களே ஆன நிலையில் சோகம்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(வயது 35). இவர் அரசு சர்க்கரை ஆலையில், தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல இரவு பணியில் ஈடுபட்ட அவர், பணி முடிந்ததும் ஆலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடல் கிடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.முகத்தில் பலத்த காயத்துடன் கிடந்தது சதீஸ்குமாரின் உடல் என்பது ெதரிய வந்தது.
இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் அளித்த பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நடந்ததா? அல்லது சதீஸ்குமாரின் இரு சக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்தால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்த சதீஸ்குமாருக்கு, பிரியா என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து, 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணமாகி இரண்டே வருடத்தில் சதீஸ்குமார் இறந்த சம்பவம் சுகம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






