என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
19 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்து
- 19 பேர் சேர்ந்து நடத்திய மொய்விருந்து நடைபெற்றது
- ரூ.1 கோடி வசூல் ஆனது
புதுக்கோட்டை:
தமிழர்களின் வீட்டில் நடக்கும் திருமணம், காதணி விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள் விழா செலவிற்காக மொய் செய்துள்ளனர். இந்த கலாசார நிகழ்வு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மொய்க்காக மட்டுமே ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் வசூல் செய்யும் பழக்கமாக மாறியது. "மொய் விருந்து" என்று அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் மொய் வாங்கியவர்கள் பிறகு லட்சங்களில் மொய் வாங்கினார்கள். பலர் கோடிக்கணக்கிலும் மொய் வசூல் செய்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கத்திற்கு பிறகு விவசாயம் பாதிக்கப்பட்டதால் குறைந்த மொய் விருந்து கொரோனா காலத்திற்கு பிறகு மேலும் குறைய தொடங்கினாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் மொய் விருந்துகள் நடத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. ஆடி மாதத்தில் மட்டும் மொய் விருந்துகள் நடத்துவதால் மொய் செய்வோர் சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஆண்டு ஆனி மாதம் முதல் நாளிலேயே கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது. வாரத்திற்கு 150 முதல் 200 பேர் வரை மொய் விருந்துகள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொத்தமங்கலத்தில் 19 பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்தினர். இதில் ரூ.1 கோடி வசூல் ஆனது. அடுத்ததாக மாங்காடு, மேற்பனைக்காடு என பரவலாக மொய் விருந்துகள் நடத்தப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்