என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
- கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது
- தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த இந்துமதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலும் தீ பரவியது. இதையடுத்து கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை போராடி அணைத்தனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாவது தடுக்கப்பட்டது.
Next Story






