என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி பலி
    X

    கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி பலி

    • புதுக்கோட்டை அருகே கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி பலியானார்கள்
    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது சோக சம்பவம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிரா மத்தை சேர்ந்தவர் அருணா சலம் (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்மான வயல் குளத்தூர் புறவழிச்சாலை யோரம் உள்ளது.இந்தநிலையில் வயலுக்கு வந்த அருணாச்சலம், அவ ரது மனைவி இளஞ்சியம் இருவரும் ஆடுகளை மேய்ச லுக்கு விட்டுவிட்டு சாலை யோரம் மரத்தின் நிழலில் நின்று பேசிக்கொ ண்டிருந்த னர்.அப்போது புதுக்கோ ட்டை யில் இருந்து வேகமாக திருச்சி நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருணா ச்சலம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ள த்தில் பரிதாபமாக உயிரிழ ந்தார்.மனைவி இளஞ்சியம் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் படுகா யமடைந்த இளஞ்சியத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்னர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளஞ்சியமும் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது பரமக்குடியை ேசர்ந்த அடைக்கலம் என்பவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×