என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 5 பேர் கைது
- சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வேந் தையன் கோவில் அருகே சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ேபாலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மணல் ஏற்றி வந்த 6 மாட்டுவண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில்ஒ ரத்தநாடு தாலுகா நெய்வேலி வடக்கு தெருவைச் சேர்ந்த சின்னையா மகன் பழனி, சிவவிடுதி சின்னையா மகன் ரெங்கராஜ், இடையா த்தி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் ரெங்கசாமி, கோவிந்தன் மகன் சிதம்பரம், இடையாத்தி வடக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முத்துசாமி, வேம்பு மகன் மாரியப்பன் ஆகியோர் என தெரியவந்தது.
இதனை தெடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து பழனி, ரெங்கரா ஜ், ரெங்கசாமி, சிதம்பரம், மாரியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். முத்துசாமி மீது கரம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் யோகரத்தின ம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்