search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 3 பேர் கைது
    X

    மது விற்ற 3 பேர் கைது

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை

    ஆலங்குடி பகுதியில் மது விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதபாண்டேக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது

    ஆலங்குடி அருகே மது விற்றுக் கொண்டிருந்த மேலகரு ம்பிரான்கோட்டையை சேர்ந்த நடேசன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 43), ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (27). மற்றும் ஆலங்குடி அரசு டாஸ்மாக் கடை அருகில் மது விற்றுக்கொண்டிருந்த அண்ணா நகரை சேர்ந்த மாணிக்கம் மகன் சேகர் ( 59). ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்ததனர். மேலும் அவர்களிடமிருந்து 39 மது பாட்டில்கள் மற்றும் ரூ.3960 பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×