என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது
- சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி நாடியம்மன் தெருவைச்சேர்ந்த கோபால் மகன் வெங்கடேஷ் (வயது 29 ), ஆண்டிகுளம் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (28), சூரன்விடுதி சிக்கப்பட்டியைச்சேர்ந்த குழந்தைவேல் மகன் ரமேஷ் (43 )ஆகியோர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர் கலைசெல்வம் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story






