search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கடைகள் தீயில் எரிந்து நாசம்
    X

    2 கடைகள் தீயில் எரிந்து நாசம்

    • 2 கடைகள் தீயில் எரிந்து நாசமானது.
    • தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிபட்டி பிரிவு சாலையில் 2 பெட்டிக்கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2 கடைகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த கடைகள் கீற்று கொட்டகையாக இருந்ததால் தீ மளவளவென்று பரவியது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இருப்பினும் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×