என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
- புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள கீழ நெம்மக்கோட்டை பகுதியில் ஆலங்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளிகோவில் தெருவை சேர்ந்த பெருமாள் ( வயது 55 ) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சேர்ந்த சேசு மகன் யூஜின் (வயது 32 )என்பவர் தனது பெட்டி கடையில் புகையிலை பொட்டலம் வைத்து விற்பனை செய்ததற்காக போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் 2 பேரையும் ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் நித்யா வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






