என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    • புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி தனியார் மில் அருகில் மளிகை ஸ்டோரில் புகையிலை பொட்டலம் விற்பதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கல்லாலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த அப்துல் காதர் மகன் சம்சுதீன் ( வயது 39) மற்றும் வடக்கு கொத்தகோட்டையை சேர்ந்த வீரையா மகன் முருகேசன் (வய து 37) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொட்டலம் 26 மற்றும் ரூபாய் 1290 இவைகளை பரிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×