என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது
- சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியாண்டி சின்னபூசாரி (வயது 65). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான சான்றிதழை போலீசார் காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்