என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் காயம்
- சாலை விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்
- காய்கறிகள் ஏற்றி வந்த போது விபத்து
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருகே காய்கறி ஏற்றி வந்த லோடு ஆட்டோ புளிய மரத்தில் மோதியதில் டிரைவர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தை சேர்ந்தவர் சின்னய்யா மகன் ராஜீவ் காந்தி (வயது 36). டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகானந்தம் (26).
இவர்கள் இருவரும் இன்று காலை திருச்சியில் இருந்து ஊரணிபுரத்திற்கு காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருதனர். வாகனத்தை ராஜூவ் காந்தி ஒட்டிவந்தார். வாகனம் கந்தர்வகோட்டை அருகே வடுகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது எதிர் பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் ராஜீவ் காந்தி , முருகானந்தம் காயத்துடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த கிராம மக்கள் இருவரையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






