என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது
    X

    வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது

    • வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கே.ராசிமங்கலம் ஊராட்சி பரப்பான்காட்டை சேர்ந்த தேவா (வயது 23) மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பததை ஊராட்சியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் (18) ஆகியோர் ஆலங்குடி அரச மரத்தடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கீழநெம்மக்கோட்டையை சேர்ந்த வினோத், மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோர் மது போதையில் தேவா, ஆதிகிருஷ்ணன் ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், வினோத் ஆகியோரை கைது செய்து, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×