என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாச்சியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- பொன்னமராவதி நாச்சியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- ஏராளமான பக்தர்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கோவிலில் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்புகட்டப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சந்தன காப்பு சாத்தப்பட்டு நாள் தோரும் சாமி திருவீதி உலாவும் அதனைத்தொடர்ந்து கோவிலில் திருத்தேரோட்டமும் நிறைவுற்று ஆடி கடைசி ஞயிற்றுக்கிழமையான நேற்று மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நன்மைக்காகவும்1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டன.
Next Story






