என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
- பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த செட்டிகுளம் வடகரையில் செந்தில்குமார் (வயது 35), காமராஜர் புரத்தை சேர்ந்த சரவணன் ( 38), அதே பகுதியை சேர்ந்த சேகர்(50), ஆலங்குடியை சேர்ந்த மகேஸ்வரன் (38), பள்ளத்தி விடுதியை சேர்ந்த பாண்டியன் (35 ) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 54 கார்டுகளும் ரொக்கம் ரூ. 54, 200 பறிமுதல் செய்தனர்.
Next Story






