search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியீடு
    X

    புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியீடு

    • புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடபட்டுள்ளது
    • இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இப் பெருவிழாவின் தொடக்க நாளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எழுச்சி உரையாற்றுகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.சென்னை பாரதி பாஸ்கர் பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா சம்பத்குமார், துணைத் தலைவர் எம் ஆர் எம் முருகப்பன், துணைப் பொருளாளர் கறு. ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர்கள் முனைவர் முருகையன், காடுவெட்டி குமார் மற்றும் விழாக் குழு உறுப்பின ர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன், முனைவர் மாரியப்பன், கவிஞர் நிலவை பழனியப்பன் , அனுராதா சீனிவாசன், காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×