என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    ஏரியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு

    • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
    • சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி - கொக்கலாடி கிராமமக்கள் தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி கிராமத்தில் உள்ள சித்தேரியில் மண் அள்ளு வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×