search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • தருமபுரி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் பழுது அடைகின்றன.

    தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள ஆத்துமேடு பகுதியில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். தருமபுரியிலிருந்து செட்டிகரை செல்லும் வழியில் ஆத்துமேடு பகுதி உள்ளது. இந்த வழியாக அரசு பொறியியல் கல்லூரி, கேந்தர்ய வித்யாலயா, அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம், வெள்ளோலை, நாயக்கனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேலும் தருமபுயில் உள்ள பள்ளி கல்லூரிக்கு செல்லவும் பணிக்கு செல்பவர்களும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×