search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டியாபத்து ஊராட்சியில்  பழுதடைந்த 3 மின்கம்பங்களை மாற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    பழுதடைந்த மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

    செட்டியாபத்து ஊராட்சியில் பழுதடைந்த 3 மின்கம்பங்களை மாற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • திடீர் காற்று மழை வரும் போது இந்த மின்கம்பம் அங்கும் இங்கும் ஆடுகிறது.
    • இந்த மின்கம்பம் சரிந்து கீழேவிழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடிஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிவிளையில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் 3 மின்சார கம்பங்கள் சிமெண்ட் எல்லாம்கீழே விழுந்து, உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    திடீர் காற்று மழை வரும் போது இந்த மின்கம்பம் அங்கும் இங்கும் ஆடுகிறது.

    இந்த மின்கம்பம் சரிந்து கீழேவிழுந்தால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இந்த 3 மின்கம்பங்களையும் உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×