search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுத்தம் செய்யாமல் சாலை போடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
    X

    பொதுமக்களிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சுத்தம் செய்யாமல் சாலை போடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

    • தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.
    • இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ராஜராஜன் நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.

    உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், மாநகராட்சி சார்பில் வார்டு எண் 29 முதல் 41 வரையிலான 13 வார்டுகளில் 23 சாலைகள் ரூ.1.80 கோடி மதிப்பில் போடப்பட்டு வருகிறது.

    அதில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தார் சாலை போடுவதற்கு முன் குறைந்த அளவில் சுத்தம் செய்யப்பட்டது. எனவே முழுமையாக சுத்தம் செய்து தார் சாலை போடப்படும் என்று உறுதி அளித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×