என் மலர்
உள்ளூர் செய்திகள்
பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை நீக்கவேண்டும்- மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
- வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை
- உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்
பூந்தமல்லி:
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேர கட்டுப்பாடு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாங்காட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பட்டாசு வெடிக்கும் நேரம் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாங்காட்டில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த நிர்வாகிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால்களை அனுப்பினர்.
மேலும் தமிழகத்தில் அணு உலைகள், தோல் தொழிற்சாலைகள் இதனால் ஏற்படாத மாசு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்டு விடுமா என்றும் இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பட்டாசு விற்பனையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களை பாதுகாக்கவும், உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துணை தலைவர் ராம.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற தபால் அனுப்பும் போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.








