என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
- இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.
நத்தம்:
நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத், தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தர்பார் நகர், பஸ்நிலையம் வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் பூஜைகள், தீபாராதனைக்கு பின்னர் சிலைகள் அம்மன் குளத்தில் கரைக்கபட்டது. இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் ராமையா, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தம்சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்